அது கடந்து வந்த பாதை மிகவும் நீளமானது. சர்ச்சையானது. சோகமானது. நிறைய சிரமங்களைக் கொண்டது.ஒரு எண் தானே என்று அதன் கதையை சாதாரணமாகக் கடந்து விட முடியாது. வாருங்கள், பூஜ்ஜியத்துடன் சேர்ந்து நாமும் பயணிப்போம். அதன் ஒற்றைத் துளையின் வழியே உலகத்தைக் காணுவோம்.
பேரா.பீ.கலீல் அஹமது அவர்கள் அடிப்படையில் இயற்பியல் துறையை பின்புலமாக கொண்டவர். இவரின் எழுத்துக்கள் அறிவியலை வரலாற்றின் வழியே தேடுவதை மையமாகக் கொண்டவை. மேலும், எழுதப்படாத அறிவியல் வரலாற்றை நிரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. மிக எளிமையான. நேர்த்தியான நடை, வாசிப்பை எளிமையாக்கி வாசகனுக்கு அருகில் கொண்டு செல்கின்றன. இணைய வழியிலும் எழுதும் இவருக்கு இந்நூல் இரண்டாவது படைப்பாகும்.
Be the first to rate this book.