ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோத்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது; பல சமயம் பூடகமானது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்...
கதையின் முதல் வாக்கியம் உருவாகும்வரை பிரளய வேகத்தில் மனத்துக்குள் தோன்றி மறையும் சம்பவங்கள், பார்வைப்புள்ளிகளில் எவற்றையெல்லாம் தேர்வது, எந்தவிதமாக இணைத்துப் பார்ப்பது என்பதெல்லாம் எந்நேரமும் நிலவும் போதநிலையைத் தாண்டி பெயரற்ற ஒரு அகவெளியில் நிகழ்கிற மாதிரி பிரமை தட்டுகிறது.
2000 முதல் 2024 வரை யுவன் சந்திரசேகர் எழுதிய கதைகள் முழுத்தொகுப்பின் இரண்டாவது தொகுதி இது.
Be the first to rate this book.