நா.விஜயரெகுநாதன் (1957) புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந் துறைக்கு அருகிலுள்ள கீழ்க்குடி புத்துவயல் கிராமத்தில் பாரம்பரியமான வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தேவகோட்டைதே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பி.ஏ., (பொருளாதாராம்) இளநிலைப்பட்டம் ஜமால் முகம்மது கல்லூரியிலும், புனித வளனார் கல்லூரியிலும் படித்தார். எம்.ஏ.,வரலாறு முதுகலைப்பட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்திலும், எம்.ஃபில்., பட்டம் அழகப்பா பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். உடற்கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் மேனாள் மாநிலம்மற்றும் பல்கலைக்கழகக் கூடைப்பந்து விளையாட்டு வீரர்.
இவர்மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரியில்உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இவரது நெறியாள்கையின் கீழ் பதின்மூன்று ஆய்வாளர்கள்உடtற்கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். யோகா மூலம் விளையாட்டுவீரர்களின் திறனை மேம்படுத்த முடியும் என்ற நோக்கில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி ஆய்விதழ்கள், பத்திரிகைகளில் வெளியீட்டு வருகிறார். தற்சமயம் தமிழ்நாடு நெட்பால் கழகத்தின் துணைத் தலைவராகவும், புதுக்கோட்டை மாவட்ட நெட்பால் கழகத்தின் செயலராகவும் பணியாற்றுகிறார்.
வி.ராஜசரோ உடற்கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உடற்கல்வித்துறை இயக்குநராக அறந்தாங்கி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் மேனாள் மாநிலம்மற்றும் பல்கலைக்கழகக் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்.
Be the first to rate this book.