பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கும் கணவனுக்கும் எந்தக் கேள்வியும் இன்றி கீழ்படிந்து நடக்க வேண்டும். ஆண்கள் உலகத்தின் அடிப்படை விதி இதுதான். எல்லாச் சமயங்களும் பண்பாடும் வேறுபாடு இன்றி இதையே வலியுறுத்துகின்றன. இந்நூலில் பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். கடவுள் தொடங்கி அனைவரையும் கேள்வி கேட்கிறார்கள். பாதிக்கப்பட்டோருக்காக வாதாடுகிறார்கள், நிமிர்ந்து நடக்கிறார்கள், துணிந்து முடிவெடுக்கிறார்கள், தனித்து இயங்குகிறார்கள். பெண்ணியப் பார்வையில் பைபிளில் உள்ள கதைமாந்தர்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி இருக்கும் இந்நூல் பாராட்டுக்குரிய ஒரு புதிய முயற்சி.
- பவா செல்லத்துரை
எழுத்தாளர், கட்டுரையாளர், பெண்கள் மேம்பாட்டுச் செயல்பாட்டாளர் வரலாறு, உளவியல், இறையியல், மகளிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழக கத்தோலிக்க திரு அவையில் நன்கு அறியப்பட்டவர். பெண்ணிய இறையியல் பேராசிரியர், பெண்கள் மேம்பாட்டுக்கான பயிற்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
Be the first to rate this book.