‘எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையே மார்க்சிய மரபு’ கட்டுரைத் தொகுப்பு நூல் சமகாலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை மிக ஆழமாக அலசுகிறது. அவற்றுக்கான அறிவியல் தீர்வுகளையும் மார்க்சியக் கண்ணோட்டதில் விளக்குகிறது. மற்ற சித்தாந்தங்களைப் பேசும் படைப்புக்களுக்குப் பொதுவெளியில் கிடைக்கும் முக்கியத்துவம் மார்க்சியப் படைப்புக்களுக்கு இருப்பதில்லை. இதற்கு முக்கியக் காரணம், மார்க்சியர்கள் முழுமையாகத் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்கால நலன் என்கிற கண்ணோட்டத்திலிருந்து அனைத்துப் பிரச்சினைகளையும் அலசுகின்றனர். இதில் நடுநிலை என்பதற்கு இடமில்லை. இந்த நிலைப்பாடு பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ச.லெனின் எழுதிய இந்தக் கட்டுரைகள் நடுநிலை உழப்பல்கள் ஏதுமின்றி ஆணித்தரமாகத் தொழிலாளி வர்க்கச் சார்புடன் பேசுகின்றன. உரிய தரவுகள் மீது நின்று தீர்வுகளை முன்வைக்கின்றன.
Be the first to rate this book.