பெண்ணியவாதி, வாழ்க்கைக் கல்விப் பயிற்சியாளர். பெண்கள் சந்திக்கும் அனைத்துவிதமான சவால்களுக்கும் வாழ்க்கைக் கல்வி மூலமே தீர்வு காண முடியும் என்பதே இவர் பயிற்சியின் சாராம்சம். ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளான 'உன்னை அறிந்தால்...', 'உணர்வு சூழ் உலகம் நூல்களில் வாழ்க்கைக் கல்வியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். விங்ஸ் வெளியிட்டுள்ள இவரது சிறார் நூலான 'ஏன் என்ற கேள்வி? சின்னஞ்சிறு குழந்தைகளைக் கேள்வி கேட்டு அறிவை வளர்க்கத் தூண்டுகிறது.
மலர் பதினொன்றாம் வகுப்பு மாணவி. அவளது ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் வானமே எல்லை. பெண் குழந்தை என்பதால் அவளுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறாள். பெண்ணோ ஆணோ கனவு என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தையும் திறமையையும் சார்ந்ததே தவிர, பாலினத்தைச் சார்ந்தது அல்ல என்று ஆழமாக நம்புகிறாள். அவளது நம்பிக்கை நிஜமானதா? அவளது கேள்விகளுக்குப் பதில்கள் கிடைத்தனவா? அல்லது அவளே பதிலானாளா? புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
Be the first to rate this book.