இது ஒரு பண்பாட்டு முயற்சி மட்டும் அன்று. நுண் அரசியல் செயல்பாடும் கூட. அடிப்படைவாத சக்திகள், சாதி மதத் தூய்மை காக்கும் பொருட்டு காதலர்களை அச்சுறுத்துகிற நிலை. அதை எதிர்த்தே நமது இத் தொகைநூல் செயல்பாடு. நமது காலத்தின் அகப்பாடல்கள் அலுவலகத்தின் தேநீர் இடைவேளைகளில், சமையற்கட்டுகளில், ஓடும் பேருந்துகளில் எழுதப்படுகின்றன. வேரல் பதிப்பகம் காதலைக் கொண்டாட நவீன கவிஞர்களிடம் காதல் கவிதைகள் கேட்டு இத் தொகைநூலை ஆக்கியிருக்கிறது. உலகின் மூத்த செம்மொழியில் கவியூற்றும் காதலும் கலந்து பெருகியபடி இருப்பதற்கான சான்று இந்நூல்.
Be the first to rate this book.