எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இவளது வாழ்வு இவ்வளவு துன்பங்கள் நிறைந்ததா என்று வாசிக்கும்போது உண்மையாகவே ஒரு நாவல் வாசித்ததைப் போல அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஒரு புத்தகம் எழுதுவதில் புதிய முயற்சி என்பதினால் சில குறைகள் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் இது கடந்துபோக முடியாத பிரதியாக நிச்சயம் இருக்கும் "வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் பெரும்பாலும் யார் யாரோக்களுக்காக இருந்து, பின் நமக்கு தெருக்கமாகிப் போகிறவர்களால் தான் வாழ்வு நிரப்பப்படுகிறது. வாழ்வின் விசித்திரமான விளையாட்டு அது" என்ற நிவேதாவின் ஒப்புதல் நிதர்சனமானது. நானும் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. அன்புத் தங்கைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
-அ.கரீம்
Be the first to rate this book.