தலித் கவிதைகள் வெளிப்படுத்திவந்த சமூகக் கோபத்தைத் தம்முடைய வாழ்விலிருந்து உருவான மொழியால் செழுமைப்படுத்தித் தந்தவர் என்.டி.ராஜ்குமார். அதேபோல அடித்தள மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல, மாற்று வாழ்வியலைத் தன்னகத்தே செழுமையாகக் கொண்டதுமாகும் என்பதை அவர் கவிதைகள் முன்வைத்தன. தொன்மங்களையும் மாந்திரீகக் கூறுகளையும் தன்னுடைய தொல்குடி வாழ்வின் தொடர்ச்சியிலிருந்து இழுத்து வந்து தமிழ்க் கவிதைப் பரப்பிற்குள் சேர்த்தார் ராஜ்குமார். கவிதைகளை வாசிக்காமல் ராக தொனியில் குரலெடுத்துப் பாடினார். அந்த வகையில் அவரது கவிதை, ‘நிகழ்த்துதலுக்கான’ பிரதியாக அமைந்தது எனலாம்.
இறுகிப்போய் கிடந்த அதிகாரங்களுக்கு எதிராக மட்டுமல்ல, இலக்கிய அழகியல்களுக்கும் எதிரான பிசாசுகளையும் வாதைகளையும் ஏவிவிட்ட அவரது கவிதைகளை, பூர்வகுடிகளின் சொல் மந்திரம் என்று கூறலாம்.
Be the first to rate this book.