சந்தியா வேளையாகிய காலையிலும் மாலையிலும் வையகம் முழுவதும் ஒரு அமைதி நிலவுகிறது. சாந்தம் குடிகொண்ட அந்தத் தருணத்தில் காது, கண் முதலிய புலன்களை அடக்கி தியானம் பண்ணுவது புராதனப் பழக்கம். இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் தியானம் (அல்லது) நிஷ்டை என்றால் இன்னதென்று இயல்பாகவே தெரியும். அதை அவன் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் பழக்கத்திற்கு கொண்டு வருவானாகில் உடல் பலம், ஆரோக்கியம், மன உறுதி, தெளிவு, நினைவாற்றல், நுண்ணறிவு, சாந்தம், ஆனந்தம் ஆகியவற்றை பெறுவான். தியானப் பயிற்சியாலேயேதான் ஞாபகசக்தி அதிகரிக்கிறது. கல்வி விரைவில் படிகிறது. எனவே கல்வி கற்பதற்கும் மேன்மை பெறுவதற்கும் தியானமே சிறந்ததாகின்றது.
-சுவாமி விவேகானந்தர்
Be the first to rate this book.