விலங்குப் பண்ணையை கம்யூனிஸ்டு எதிர் பிரச்சாரம் என்று சொல்வதை விட அரசியல் வேகம் எந்த இடத்தில் கொண்டுபோய் விலங்குகளை (அதாவது மனிதர்களை) நிறுத்தும் என்று சொல்கிற ஒரு கேலிச்சித்திரமாகச் சொல்லலாம். விலங்குகளை குழந்தைகளின் மனத்தையும் கவரக்கூடிய மிருகங்களாகச் சித்தரித்த பெருமை அவருடையது. கம்யூனிஸ்டு பிரச்சாரமும எதிர் பிரச்சாரமும் அலை ஓய்ந்து அடங்கிய பின்னும் கூட விலங்குப் பண்ணை மக்கள் மனதைக் கவரும் என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை.
ஏனெனில் எல்லா விதங்களிலும் நித்தியமான ஒரு தத்துவத்தையே ஆர்வெல் இந்த நூலில் சித்தரிக்க முயன்றிருக்கிறார். மனிதனோ மிருகமோ அரசியல் விளையாட்டை இன்றுள்ள ரீதிகளில் நடத்திச் செல்கிற வரையில் விலங்குப் பண்ணையின் முடிவுகள் தவிர்க்க முடியாதவை என்று வற்புறுத்துகிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.