இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அவருடைய கைவந்த படைப்பாற்றலையும் சமுதாய அக்கறையையும் வலுவாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது. அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனிபாணி உண்டு என்பதை நுண்ணிதின் உணரலாம். அவருடைய கதைகள் எழுதியதைப் படிப்பது போல் தோன்றுவதில்லை. அவரே எதிரே உட்கார்ந்து சொல்வதைப் போலவும், நாம் ஆர்வத்தோடு காதுகளால் கேட்பது போலவும் உணர்வோம். ஏனென்றால் கதைகள் எழுத்து நடையில் அமையாமல் பேச்சு நடையாக, நேரிடையாகப் பேசுவதுபோல் எழுதும் திறமை வாய்க்கப் பெற்றவர் அவர். சில எழுத்தாளர்களை கதைசொல்லி என்று குறிப்பிடுகிறோமே, அந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் நண்பர் நாராயணன்.
அமரர் கலைமாமணி, பேராசிரியர்,
-டாக்டர். அய்க்கண்
Be the first to rate this book.