சிறு ஒரு புல்லிலும், காய்ந்த சருகிலும், உருகும் மெழுவர்த்தியிலும் வெறுமனே என வீசப்பட்ட விதையிலுமென எங்கெங்கு பார்த்தாலும் கதைகள் நிறைந்து கிடக்கின்றன. பலரும் கடந்து போகும் மெல்லிய கோடுகளுக்குள் கிடக்கின்றன உயிருள்ள கதைகள்.
இக்கதைகளுக்கான தேடலை வாழும் சமூகத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடிந்த படியால் ஒவ்வொரு கணமும் கதைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன. என்னை பெற்றெடு என்கிற உந்துதலோடு நாள் தோறும் என்னில் மல்லுக்கட்டும் கதாபாத்திரங்கள் நிறைய மரத்துப்போன விறகுத்துண்டுகள் கூட தங்கள் வாழ்வியலை படைப்பாளிகளோடு பேசிகொள்கின்றன. உயிரற்றவைகளென ஒதுக்கிப் போட்ட பலதும் கை கால்கள் முளைத்து படைப்பாளியை கட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அப்படிக் கவ்வி பிடித்துக்கொண்டவர்களே வெற்றுப்பக்கங்களின் கதை மாந்தர்கள்.
Be the first to rate this book.