வெறுப்பு என்பது வெடிக்கக் காத்திருக்கும் ஒரு கண்ணி வெடி. அது ஓர் எரிமலை. வெறுப்பு ஒரு மனநோய். அது தன்னையும் அழித்துப் பிறரையும் அழிக்கும்.
இன்று மதம், மொழி, இனம், நிறம், பிராந்தியம், நாடு, கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பை வளர்த்து மக்களை மோதச் செய்து சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் பெருத்த ஆதாயமடைகின்றனர். மக்கள் இந்த உண்மையை உணராமல் வெறுப்பை விதைப்பவர் களுக்குப் பின்னால் கண்மூடித்தனமாகச் சென்று தங்களையும், சமூகத்தையும் பாழ்படுத்துகின்றனர்.
வெறுப்பின் விளைவுகளைக் காலதாமதமாக உணர்கின்றனர். ஆனால் அதற்குள் ஏராளமான பாதிப்புக்கள் நடைபெற்று முடிந்துவிடுகின்றன
Be the first to rate this book.