விக்ரமாதித்யன் ஒரு பெருங் கவிஞராக அறியப்பட்ட அளவுக்குப் பிற முகங்கள் அறியப்படவில்லை. முக்கியமாக அவரது சிறுகதைகள் அதிகமாகத் தமிழ்ச்சூழலில் பேசப் படவில்லை. அவருக்கு முன்பு அதிகம் எழுதப்படாத, பிரிக்கப் படாத முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தின் நிலமும் பொழுதுகளும் அதில் விரிவாக இருக்கின்றன. போக்கும் வரவும் செலவும், குடும்ப நினைவுகளும், பிரிவின் துயரங்களும் ஊடாடுகின்றன. ஒரு சஞ்சாரங்களும் நவீன மொழியில் ஆவணம் கண்டிருக்கின்றன. கவிதைகளைப் போலவே செவ்வியலான கலைத்திறனை சிறுகதைகளிலும் கொணர்ந்திருக்கிறார். புனைவைவிட உண்மைச் சம்பவங்கள் அழுத்தமானவை; நம்புதற்கரிய வாழ்வின் பக்கங்களைக் கொண்டவை என்பதற்கு முன்னுதாரணம், விக்ரமாதித்யன் சிறுகதைகள், அவரது சிதறிய உருவங்களின் ஒரு உருவே பூர்ணன் சுதாப்பாத்திரம். பாசாங்கற்ற, இயல்பான இருத்தலை நாடி அலைக்கழிபவராக இளம் பருவமும் நடுத்தர வயதும் அடைந்த பூர்ணன் இந்தத் தொகுப்பில் வருகிறார்.
விக்ரமாதித்யன் சாமானியனின் சஞ்சலங்களும்
~ஆகாசமுத்து
Be the first to rate this book.