ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்து வரலாறுகளைப் பதிப்பித்த முத்தாலங்குறிச்சி காமராசு தற்போது புதினத்திலும் தடம் பதித்துள்ளார். வெள்ளத்துரை நாவலில் தூத்துக்குடி மாவட்ட உண்மை சம்பவங்களையும், பாதிக்கப்பட்ட மாற்று சாதி பெண்ணுக்கு உதவ சென்றவன் வாழ்வில் நடக்கும் வித்தியாசமான காதலையும் வெளிப்படுத்தியுள்ளார். தெளிந்த நீரோடையாக ஓடும் பொருநை நதிக்கரையில் வாழும் மனிதர்களின் பழக்க வழக்கங்களை புரோட்டா சால்னா போல ஆங்காங்கே உதிர்த்து விட்டுச் செல்லுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி சம்பவங்கள் பல இடம்பெற்று உள்ளது.
Be the first to rate this book.