Can not draw circles around me ma வட்டத்துலேதாண்டி சுத்தறது, வட்டத்துலேருந்து உன்னாலே எப்படிடீ தப்பிக்க முடியும்?'னு ஒரு தரம் அப்பா கேட்டார். நான் உடனே என்ன சொன்னேன் தெரியுமா? 'ஏற்கெனவே ஒரு பெரிய வட்டத்துக்குள்ளதான் இருக்கோம்னு தெரிஞ்சிண்டுமா. இப்படி என்னைச் சின்னச்சின்ன வட்டத்துக்குள்ள நிக்க வச்சு பாக்கறேள்?'னு திரும்பிக் கேட்டேன். நந்தகுமாருக்கு எதிர்க்கேள்வி கேட்கிற வாய்ப்பே இல்லாமல் அடித்துவிட்டான். சுகன்யா ஒரு நெடிய மௌனத்தின் ஜீவபாகத்தை எத்தனை அலட்சியமாய் நெரித்துக் கொன்றுவிட்டு. இப்போது எல்லா அசட்டு மரபுகளுக்கும், எல்லாப் போலித்தனங்களுக்குமென்றே அவதரித்த ஓர் அதிபயங்கர சம்ஹார சொரூபிணியாய் அவள் காட்சி அளிக்கிறாள்!"
Be the first to rate this book.