சேறாடிய எருமைகளின் உடலில் என் நிலத்தின் நறுமணம் மலங்களைக் கிளறிப் பரியாறிக் கொல்லை திரும்பும் பன்றிகளில் என் நிலத்தின் பிசுபிசுப்பு செம்மறி ஆடுகளின் புழுக்கைகளில் எங்கள் பயிர்களின் ஆன்மா தெரு நாய்களின் வயிற்றுக்குள் நாங்கள் உண்ட உணவின் மீதங்கள் இவை எதுவும் காணாத பொழுதுகளில் உள்ளங்கையில் இறுகப் பிடித்து தெஞ்சு முழுவதும் பூசிக்கொள்கிறேன் ஒரு பிடி மண்ணை.
Be the first to rate this book.