வீடு வாங்கும்போது பெரும்பாலானவர்கள் முதலில் யோசிப்பது, வங்கிக் கடன் பற்றித்தான், ஆனால், நமக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எவ்வளவு பனாம் கிடைக்கும். என்ன என்ன விவரங்கள் கேட்பார்கள் என்பது பற்றியெல்லாம் நமக்குத் தெரிந்திருக்காது. வங்கிக்குள் நுழைந்தவுடன் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் புதியதாகத் தோன்றும். ஏன் இத்தனை விவரங்கள் கேட்கிறார்கள் என்ற மலைப்பு ஏற்படும். என்ன காரணம்? நமக்கு வங்கிக் கடன் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது என்பதால்தான்.
வீட்டுக் கடன் வாங்கத் தேவையான அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் அலசுகிறது இந்தப் புத்தகம், வீட்டைக் கட்டப் போகிறீர்களா அல்லது கட்டிய வீட்டைப் வாங்கப் போகிறீர்களா, வீட்டுக் கடனுக்கு எந்த வங்கியை அணுகுவது என்று எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும், வங்கியில் யாரை அணுகவேண்டும். அந்த வங்கிக்குள் நுழைவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன, வீட்டுக்கடனுக்கு என்ன வட்டி, மாதாமாதம் செலுத்தப் போகும் தொகை என்ன, அதில் அசல் என்ன, கடனுக்கான வட்டி என்ன, நமக்கு எவ்வளவு கடன் தொகை கிடைக்கும். வீட்டுக் கடனில் பிரச்சினை என்றால் யாரை அணுகவேண்டும் என எல்லா விவரங்களையும் எளிமையாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் நா.கோபாலகிருஷ்ணன்.
வீடு வாங்க நினைப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய கையேடு இது.
நா.கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் திண்டுக்கல், படித்தது இளங்கலை பொறியியல் (CIVIL ENGINEERING). வங்கி மற்றும் நிதித்துறையில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். முன்னணி வீட்டுக்கடன் நிறுவனம் ஒன்றின் தமிழ்நாடு தலைமைப்பொறுப்பில் இருந்தவர். கடந்த ஒன்பது வருடங்களாக, வங்கிகளுக்கான கட்டட மதிப்பீடு மற்றும் கட்டடம் கட்டும் நிறுவனத்தினை திண்டுக்கல்லில் நடத்தி வருகிறார். கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போட்டித்தேர்வுகள் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஒரு சிறிய நிறுவனத்தின் உரிமையாளர்.
Be the first to rate this book.