காதல்.. சுவிட்சர்லாந்து விடுமுறையில் பனியில் மரங்களைச் சுற்றி லா லா லா என்று பாடிக்கொண்டே ஆடுவதுதான் காதலா? அல்லது வாழ்க்கைத் துணைக்கு ரோஜாப் பூக்களும் மிருதுவான கரடி பொம்மைகளும் பரிசாக அளிப்பதா?
தனக்கு விருப்பமானவை அனைத்தையும். அவள் காதல் அவள் பெற்றோர்... ஏன் அவளது இசையார்வத்தையும் இழந்தபின்னர் சமைரா விரக்தியடைந்தவளாக இருக்கிறாள். தன் வாழ்க்கையின் மிகுந்த தாழ்வான நிலையில், தனக்கு விருப்பமானது எது என்றுகூட அறியாதவளாக இருக்கிறாள்.
கிரியேட்டிவ் டேங்க்ஸ் கம்பெனியின் வெற்றிகரமான தலைவன் விவியன். இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபராக வளர வேண்டுமென்ற கற்பனை கொண்டவன்.அவர்கள் பாதைகள் குறுக்கிடும்போது மின்சாரம் பாய, ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர். அவளைச் சுற்றியுள்ள மர்ம ஒளி விவியனின் இதயத்தை சுண்டி இழுக்கின்றது.காதல், நம்பிக்கை மற்றும் தன் அபிலாஷைகளிலிருந்து தப்பித்து ஓடுவதில் சமைரா தீவிரமாக இருக்க, அவளை மீண்டும் தடத்திற்கு கொண்டுவருவதை தன் முக்கியப் பணியாக ஆக்கிக்கொள்கிறான் விவியன்.
முடிவிலிருந்து புதிய துவக்கங்கள் வரையான அவர்களது சுவாரசியமான பயணம் இப்படித்தான் துவங்குகிறது. ஒருவருக்கொருவர் உந்துதல் அளித்தபடி அனைத்து முரண்களுக்கிடையே தங்கள் கனவுகளை விரட்டுகிறார்கள். இந்தக் கடினமான வாழ்க்கைப் பாதையை அவர்கள் கடக்கும்போது வெற்றிப் படிகளை ஒன்றாக ஏறுவார்களா? அல்லது நொறுங்கி எரிந்துவிடுவார்களா?
Be the first to rate this book.