தன்னம்பிக்கை ஒன்றையே ஆகப்பெரிய மூலதனமாகக் கொண்டு நன்னம்பிக்கை முனை' வழியாக இந்தியாவில் கால்பதிக்க முயன்றவர் வாஸ்கோடகாமா. ஆப்பிரிக்கக் கிழக்குக் கடற்கரையோரமாகப் பயணித்த அவர், பயணத்தின் இறுதியில், சாதகமாக வீசிய காற்றின் உதவியினால் இருபத்து மூன்று நாள்களில் எளிதாகக் கோழிக்கோட்டை வந்தடைந்தார். சாமூத்திரி மன்னரின் பேரன்புக்கு உரியவராகிப் பல்வேறு விலையுயர்ந்த பொருட்களோடு தாயகம் சென்றடைந்தார்.
இந்தியாவிற்கும்-ஐரோப்பாவிற்குமான கடல்வழியை இந்தியப் பெருங்கடலினூடாகச் சாத்தியப்படுத்திய காமா, இப்பயணத்தில் சந்தித்த சவால்கள், எதிர்கொண்ட இன்னல்கள், ஆட்பட்ட துரோகங்கள் இவற்றோடு இனிய அனுபவங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய கதையே இக்குறு நூல்.
சாகசப் பயணமான காமாவின் கதையை மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் மூல நூலையே வாசிக்கிற சுவாரசியத்தோடு தந்திருக்கிறார் ஆசிரியர் த. கவிதா.
Be the first to rate this book.