பல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன?
அது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர் அங்கம். வாழ்க்கை என்பது கண் முன்னாலே கடந்துசெல்கின்ற ஒன்று, அதை எடுத்துச்செல்வதற்கு எதுவும் இல்லை. வெறுமனே சாவுக்காகக் காத்திருப்பது போன்றது. வாழ்வில் காலம் என்ற ஒன்றே இல்லை. குழந்தைப் பருவம், பெண்மை, ஆண்மை, வயோதிகம், வாழ்வு, சாவு, காதல், காதல் அற்றமை, திருப்தி, திருப்தியற்றமை என எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். தெளிவு, மடமை, இருத்தல், இல்லாமையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.
Be the first to rate this book.