நெல்லையின் முகவரியாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன். நெல்லையின் வரலாற்றுப் பெருமைகளை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்க செயல்பாட்டாளர், சமூகச் செயற்பாட்டாளர், சிறந்த அமைப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட நாறும்பூநாதனைப் பற்றி அவருடைய நண்பர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், இடதுசாரிக்கட்சித் தலைவர்கள், எழுதிய நினைவலைகளின் தொகுப்பு நூல். இந்த நூலை வாசிக்கும்போது நாறும்பூநாதன் வாழும்போதும் மறைந்த பிறகும் நமக்குச் சொன்ன செய்திகளை அறிந்துகொள்ள முடியும். பின்பற்றவும் முடியும்.
Be the first to rate this book.