ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக சிறுகதை, நாவல், அல்புனைவு என்று தமிழ்த் தொண்டு செய்து வரும் எண்பத்திரெண்டு வயது விட்டல் ராவ், தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். நேர்த்தியான ஓவியர். தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நூறு நாவல்களில் ஒன்றான வண்ண முகங்களை எழுதியவர் என்ற பெருமைக்கு உரியவர். படியுங்கள்.
-இரா.முருகன்
குப்பி வீரண்ணா, சங்கரதாஸ் சுவாமிகள், இன்ன பிற ஸ்பெஷல் நாடகக் குழுக்கள் எல்லாமே ஒரு கால மாற்றத்தின் இடைவெளியில் சிக்க நேர்ந்தவை. கிராமிய நிகழ்கலை வடிவங்கள் பின்தள்ளப்பட்டன; அவற்றிலிருந்து மாறுதலடைந்த நாடக வடிவம் தொழிலாகப் பலருக்கும் வாழ்க்கை உத்தரவாதம் தருமளவு செழித்தது. ஆனால் தொடர்ந்து நிகழ்ந்த நகர்மயமாக்கல், அறிவியல் மாற்றங்கள், அரசியல் பொருளாதார மாற்றங்கள் இவற்றால் தளர்ந்து நசிவடைந்து சினிமாவுக்கும் அமெச்சூர் நாடகத்துக்கும் ஈடுதர முடியாமல் சிறுத்துப் போனது பற்றிய இந்த வரலாற்றில் மனித உறவுகளின் வகைவகையான தன்மைகள் கணக்கின்றி பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் சில முகங்களைத்தான் இங்கு விட்டல் ராவ் 'வண்ண முகங்களாக' அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
-ஞாநி
Be the first to rate this book.