அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு. டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் 'குறளமுதம்' நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் மூன்றும் இணைந்து இந்நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.. இராஜராஜ சோழனைப்போல இராஜேந்திர சோழன் இருந்ததில்லை; இராஜேந்திர சோழனைப்போலக் கரிகால் பெருவளவன் இருந்ததில்லை. கார்ல் மார்க்ஸைப்போல லெனின் இருந்ததில்லை லெனினைப்போல ஸ்டாலின் இருந்ததில்லை; ஸ்டாலினைப் போல குருஷேவ் இருந்ததில்லை. குருஷேவைப்போல பிரச்னேவ் இருக்கவில்லை. காந்தியைப்போல நேரு இருந்தாரா? நேருவைப்போல லால்பகதூர் சாஸ்திரி இருந்தாரா? லால்பகதூர் சாஸ்திரியைப் போல இருக்கக்கூடத் தேவையில்லை. அவருடைய தகப்பனார் ஜவஹர்லால் நேருவைப் போலவாவது இந்திரா காந்தி அம்மையார் இருக்கிறாரா? இந்தக் காலத்தில் பெற்ற அப்பனைப் போலப் பிள்ளைகளே இருப்பதில்லை. பெரியாரைப் போல அண்ணா இல்லாத போது அண்ணாவைப் போல டாக்டர் கலைஞர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.