கடினமான விளக்க உரைகளை ஒரு புறம் வைத்து, எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான விளக்கங்களோடு கூடிய திருக்குறள் உரைகள் உருவான காலம் 20ஆம் நூற்றாண்டு. அத்தகைய பல்வேறு முயற்சிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று தான் முனைவர் தேமொழி அவர்கள் எழுதி வெளிவரும் "வள்ளுவர் குறள் ஆத்திச்சூடி முறையில் நூல்.அகர வரிசையில் சொற்களைக் கோர்த்து காலத்திற்கேற்ற நல்ல கருத்துக்களைக் குறுஞ்செய்திகளாக வழங்கியவர்களுள் முன்னோடி ஔவையார். அவரது ஆத்திச்சூடி வழியில், வள்ளுவரின் குறட்பாக்களை அகர வரிசையில் வரிசைப்படுத்தி ஆத்திச்சூடி வகையில் குறுஞ்செய்தியாக விளக்கமும் வழங்குகின்றது இந்நூல். இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டின் சிறப்பு வெளியீடாக மலர்கிறது. உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்த நூல் சென்றடைய வேண்டும்!
-க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
Be the first to rate this book.