திருக்குறள் முன்பு எப்போதோ எழுதப்பட்ட நூல்தான். ஆனால், திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் யாவும் இன்றைய வாழ்க்கைக்கும் துணை நிற்கின்றன, வழிகாட்டுகின்றன.
இரண்டே வரிகளில் அமைந்துள்ள குறள்களைப் பாடலாகப் படிப்பது ஒரு சுவை என்றால், உரையைப் படித்து அதன் பொருளைத் தெரிந்துகொள்வது இன்னொரு சுவை; அதன் மையக் கருத்தைச் சுவையான, ஆழமான எடுத்துக்காட்டுடன் யாராவது விளக்கிச் சொன்னால் மேலும் சுவை.
இந்நூல் அந்த மூன்று சுவைகளையும் உங்களுக்குக் கொடுக்கும், விறுவிறுப்பான கதைகளின் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.திருக்குறள் வழியில் நடக்கும் நல்ல மனிதர்களைக் கொண்ட இந்த வள்ளுவர் இல்லத்துக்குள் வாருங்கள், நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள்!
Be the first to rate this book.