"சூத்திரன் என்றால் ஆத்திரங் கொள்", "பார்ப்பானைச் சாமி என்று அழையாதே." "புரோகிதனைப் போற்றாதே" என்னும் தன்னுணர்வுத் தொடர்கள் தோன்றின. மேலும் மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால்தான் பார்ப்பனர்களின் கர்வ மனப்பான்மையும், மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையும் நீங்கிச் சமத்துவம் அரும்ப முடியும் என்பதும் விளங்கிற்று. அதற்காகவே, மக்களிடை பழமை, வைதீகக் கொள்கைகளின் கேடுகளை விளக்கிப் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பலாயினர். சுயமரியாதை இயக்கம் விதைக்கப்பட்ட பின்பே, அதன் பயனாகக் 'குடியரசு' முளைத்தது, 'ரிவோல்ட்' (revolt) 'புரட்சி' தழைத்தது. 'பகுத்தறிவு' அரும்பிற்று, "விடுதலை" பூத்தது.
-புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.