யாழினிஸ்ரீ அசையாமல் நின்றெரியும் சுடர். அன்பில் நனைந்து நெகிழ்ந்த மனத்திலிருந்து நம்பிக்கையின் ஈரக்காற்றில் நனைய வைக்கும் தாவரப்பச்சை அவரது கவிதைகள்.
‘பசியைக் குழைத்துப்பூசித் தீட்டிய ஓவியத்தின் மீதூரும் ரயில்பூச்சியின் கால்களை எண்ணியபடி அட்டணக்கால் போட்டு ஆசுவாசம் கொள்கிறது
அவ்வாத்மா’ யாழினி தன்னைத்தானே வரைந்து பார்க்கிற சுயசித்திரம் இது. ஓவியத்திலிருக்கும் ரயில்பூச்சி, இதை ரசிக்கிற, யாசிக்கிற
ஒவ்வொரு விழியிலும் மனத்திலும் ஊர்வதைத் தவிர்க்க முடியாது. இதுதான் எழுத்தின் வெற்றி. அந்த ஆசுவாசம் யாழினியை ஆசிர்வதிக்கட்டும்.
- கவிஞர் பழனிபாரதி
Be the first to rate this book.