இன்றைய ஆட்சி முறையால் வடவரின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு, சிக்கிச் சீரழிகிறோமே என்பதை முன்பே உணர்ந்து குமுறிக்கிடக்கும் காளைகள், இந்திய அரசியல் சட்டம் ஒரு பொன்விலங்கு, இரும்புத்தளை, நியாயமான உரிமைகளுக்காகக் கூட அதைத் திருத்துவதற்கும் இடமில்லை. என்று கண்டுகொள்வார்களானால் அதை உடைத்தெறியத் தயங்கமாட்டார்கள் திராவிட மக்கள் எத்தனை எத்தனை பிரிவாக இருப்பினும் ஒன்றுபட்டுவிடுவார்கள். திராவிடத்தின் விடுதலைக்காகத் துவக்கப்படும் அறப்போரின் முரசொலி கேட்டவுடன் அந்நிலை கூடாது என்று எண்ணுபவர்கள், சிறிதுகாலமேனும் நீட்டித்துச் செல்லக் கைக்கொள்ளக் கூடிய இறுதி முயற்சியெல்லாம் வகுப்புரிமைச் சட்டத்தை நிலைநாட்டச்செய்வதேயாகும். இது நிலைநாட்டப்படாவிடில், நிலை என்று எண்ணியுள்ள வேறுபலவும் நிலையற்றுப்போய், புதியன பலவும் நிலைநாட்டப்பட்டே தீரும் என்பதை ஆட்சியாளர் நன்கு உணரவேண்டும்.
-புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.