தனக்கென்று கனவுகளும், கனவால் துரத்தப்படும் தேடல்களுமாக இளைஞர்கள் அலைக்கழிவது காலம் காலமாக நடந்துகொண்டேயிருப்பது. கூடவே மகன்களின் வாழ்க்கையை வழிநடத்த முயலும் தந்தைகளாலும் நிறைந்திருக்கிறது இவ்வுலகு.
வாழ்க்கை நம் விருப்பத்தாலும் முயற்சியினாலும் அமைகிறதா? இல்லை சூழ்நிலையினாலா? வாழ்க்கையில் காரணகாரியம் ஆராய்ந்து அறிய முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக மனிதன் வெறும் கருவிதானா? என பல காலாதீதமான கேள்விகள் நான்கு நூற்றாண்டுகளின் சரித்திரத்துடன் விரிகின்றன.
இத்தாலியில் க்ரெமோனா, வெனிஸ், இங்கிலாந்து, இந்தியாவில் ஈரோடு - பவானி, சான்ஃப்ரான்சிஸ்கோ, திருச்சி - திருவானைக்காவல் என்று பல நிலங்களில் பல தலைமுறைகளில் பல காலங்களில் மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பிணைப்பதும், அவர்களை வாசிப்பதுமான ஒரே ஒரு கருவி – வாச்சியம்.
Be the first to rate this book.