வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள் வாழ்க்கையில் வளரத் தொடங்குங்கள்!
மும்பை மாநகரின் மிகநெரிசலான போக்குவரத்துக்கு இடையே பயணம் செய்து கொண்டிருக்கும்போது, கோர் கோபால் தாஸ் அவர்களுக்கும், அவருடைய நண்பர் ஹேரிக்கும் இடையேயான உரையாடலே இந்நூல். மக்கள் எதிர்கொள்ளும் நிலைகளையும், ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியத்தைக் கண்டு கொள்ளும் வகைகளையும், தொடர்ந்த இனிய வாழ்க்கைக்கான திறவுகோலைக் காண்பதற்குமான வழிமுறைகளையும் இந்த உரையாடலில் நாம் காணலாம்.
நீங்கள் உங்கள் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளவோ, உங்களுடைய உண்மையான திறமையைக் கண்டுகொள்ளவோ, உங்கள் பணியை எவ்வாறு திறம்படச் செய்தல் இயலும் என்பதை புரிந்து கொள்ளவோ, நீங்கள் வாழும் இந்த உலகத்துக்கு நீங்கள் எதைத் திருப்பி அளித்தல் இயலும் என்பதை அறிந்து கொள்ளவோ விரும்பினால் அதற்கான பயணத்தை அறிமுகப்படுத்தும் இந்நூல் அந்தப் பயணத்தில், மறக்கவியலாத அனுபவங்களுடனும், வாழ்க்கையின் பல்வேறு பகுதிகள் குறித்த அரிதான பல நுண்ணறிவுச் செய்திகளையும் துறவி கோர் கோபால் தாஸ் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
உலக அளவில், மிகப்பலரால் பின்பற்றப்படுகின்ற, மிகவும் பிரபலமான, வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும் துறவியாக விளங்கும் கோர் கோபால் தாஸ், வாழ்க்கையில் அவர் பெற்ற ஞானத்தை கோடிக்கணக்கான மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய முதல் நூலான "வாழ்வின் அற்புதமான ரகசியங்கள்", வாழ்க்கையில் அவர் அடைந்த அனுபவங்களையும், படிப்பினைகளையும் சாறாகக் கொடுக்கும் நூலாகும். உங்கள் எண்ணங்களைத் தூண்டும் விதத்திலும், நகைச்சுவை உணர்வுடனும் அமைந்த இந்நூல், நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கும் உதவும் நூலாக அமையும்.
Be the first to rate this book.