வானதிகாரம் என்ற தலைப்பில் இயற்கையோடு ஒன்றிணைந்த ஒருங்கிணைந்த மனதில் நிழலாடுகிற மறதியில் வழிந்தோடுகிற பல விஷயங்களைக் கவிச் சொற்களில் தொடுத்திருக்கிறார் அருண்குமார்.
வாசிக்க வாசிக்க இன்பம் என்பதுபோல் வானம், மழை, நிலா என வசீகரிக்கிற கவிதைகள் அழகை மட்டுமல்ல.. ஆச்சர்யத்தையும் அள்ளித் தருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் கவிதைகள் பக்கங்கள் முழுதும் விரவியிருக்கின்றன. நீ மதி நிம்மதி என்பதாகட்டும்.
வானத்தைக் கீழ்வானமாகக் கவிதைக்குள் நுழைப்பதாகட்டும்.. மழையும், குளிர்ச்சியுமாய் நம் கவனத்தை நனைத்துவிடுகின்றன வரிகள் யாவும்.
Be the first to rate this book.