குழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை.
வாசிப்பு சுவாரசியமும் வேகமாய் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைப்போக்கும் குழந்தைகளுக்கு மட்டுமா... இல்லையில்லை... வாசிக்கிற யாவரையும் வசீகரித்துவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்த கதைப் புதையல் இது.
ஒன்பது முதல் பதின் வயது குழந்தைகளின் கற்பனைத் திறனையும் , தமிழ் வாசிப்பையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ள கதைகள் சிலவற்றின் தொகுப்பு இது.
இந்தக் கதைப் புதையலில் உள்ள புத்தகங்கள்:
1) ஒரு பூ ஒரு பூதம்
2) இயற்கையின் அற்புத உலகில்
3) மரப்பாச்சி சொன்ன ரகசியம்
4) பறக்கும் ஹேர் க்ளிப்
5) பேய் பிசாசு இருக்கா?
6) காணாமல் போன சிப்பாய்
Be the first to rate this book.