திராவிட இயக்கம் உருவாகவும், திராவிட இயக்கம் நின்று நிலைபெறவும் ஆக்கப்பூர்வமான பல செயல்களைச் செய்தவர் ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழாவைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினோம். அவர் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆவணங்களின் தொகுப்பாக அமைந்திருந்தது. அந்தப் பணிகளுக்கு எங்களோடு உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளர் ஆய்வாளருமான செ.அருள்செல்வன் அவர்கள். திராவிட இயக்கத்தின் வேராகவும், தனித்தமிழ் இயக்கத்தின் தூணாகவும் இருந்த ‘தூய தமிழ்க் காவலர்’ அண்ணல்தங்கோ அவர்களின் பெயரன். ‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்பிரமணியம், அண்ணல்தங்கோ ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய அருள்செல்வன், இப்போது ‘வாலிபப் பெரியார் ஆசைத்தம்பி வாழ்க்கை வரலாறு’ என்ற கனமான தொகுப்பை வழங்கி இருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது தனிப்பட்ட ஒருவரின் வரலாறு மட்டுமல்ல.
கழகத்தின் வரலாறு திராவிட இயக்கத்தின் வரலாறு தமிழ்நாடு அரசியல் வரலாறு.
Be the first to rate this book.