நாங்க எந்தப் பறவையையும் கூண்டும் அடைகிறது இல்லை; அணில்களை சங்கிலி போட்டுக் கட்டுவது கிடையாது. அப்போ அவற்றுக்குப் பாதுகாப்பு தானே அது?” எல்லோரும் குளத்தைப் பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய புள்ளியாக ஒளிகள் ஆங்காங்கே திரிந்தன. அந்த ஒளிகளை நோக்கி மீன்கள் தாவின. ஆனால் அதற்குள் அந்த ஒளிகள் பறந்து பக்கத்தில் இருந்த செடியில் அமர்ந்தன.
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.