அறிவையும் ஞானத்தையும் படிப்பினைகளையும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வழிவழியாக சீதனமாகக் கொடுப்பதற்கு, காலங்காலமாகக் கதைகள் ஓர் ஊடகமாக இருந்து வந்துள்ளன.எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல், அதிக எண்ணிக்கையிலான வாசகர்களின் மனங்களைக் கவரக்கூடிய குட்டிக் கதைகளின் தொகுப்பின் ஊடாக, கதை சொல்லுதல் என்ற பாரம்பரியத்தை உயிர்த்துடிப்போடு வைக்கிறது.
இக்கதைகள், நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற சூழ்நிலைகள் பற்றிய, விலை மதிக்கப்பட முடியாத அரிய வாழ்க்கைப் பாடங்களாக அமைந்துள்ளன. படைப்பாற்றலில் தொடங்கி, புதுமை, குழுப்பணி,தலைமைத்துவம், அன்பு, துணிச்சல், பக்குவம், தன்னம்பிக்கைவரை பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற இக்கதைகள் சிந்தனையைத் தூண்டுபவையாக இருக்கின்றன. இவை கிட்டத்தட்ட அனைத்து மனித உணர்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் வழங்கப்பட்டுள்ள விதம் தனித்துவமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும்,அதற்குரிய கேள்விகளுடன் நிறைவடைகிறது. இது வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், யாரோ தங்களுடன் பேசுவது போன்ற ஓர் அனுபவத்தை அவர்களுக்குக்கொடுப்பதாகவும் இருக்கிறது.
Be the first to rate this book.