ஒரு பெண் கதை சொல்லியாய் தன் வாழ்வை குறுக்கு வெட்டு தோற்றத்தோடு பார்க்கும் வாழ்வியல் தன் துக்கம், மகிழ்வு,காதல், எதிர்பார்ப்பு, அதன் தகர்தல், எரிச்சல், வெறுப்பு, நோய்மை, பிளவு, புரிந்துணர்தல் என எல்லா உணர்வுகளையும் அந்தப்பெண்ணின் கண் வழி நம்மைக் காண வைத்திருக்கிறார்.
மனித மனதின் எல்லா உணர்வுகளையும் சொல்லிக்கொண்டு போகும் வாழ்வியல் பாதையில் திகட்டத் திகட்ட இவ்வளவு அன்பா என்று ஆச்சரியப்பட்டு நின்றபோது சடாலென ஒரு பிளவு, ஈட்டி கொண்டு குத்தியது போல ரத்தத் தெறிப்பு, மிக அழகாய் அதிலிருந்து வெளிவந்தாலும், என்னதான் நாம் சரியானாலும் இனி பழைய மாதிரி வாழ முடியாது என்றுணரும் தருணங்கள், மிக இயல்பாக வந்திருக்கின்றன.
இரண்டாவது நாவலில் லிவின் சொன்ன விஷயங்களுக்கும் அதை சொன்ன விதத்திற்கும் கதையோட்டத்திற்கும் பாராட்டலாம்.
-கே.வி. ஷைலஜா
Be the first to rate this book.