கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், அறிவியல் இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தன் இலக்கிய ஆளுமையைச் செலுத்திவரும் இளம்பாரதி வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பவர். சுய படைப்புகள் மூலம் தடம் பதித்த இவர் தற்போது மொழி பெயர்ப்புகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கும் இவருக்கு சாகித்ய அகாடமி, நடுவண் அரசு, திருப்பூர் தமிழ்ச் சங்கம், நல்லி-திசை எட்டும். நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆகிய அமைப்புகள் மொழிபெயர்ப்புக்கான பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கியிருக்கின்றன.
Be the first to rate this book.