என் இடது கையில்
நாணயத்தை வைத்தேன்
அதன் மேல் ஊதினேன்
வலது கையால்
அதை மூடிவிட்டு
அவளிடம் கூறினேன்:
‘பக்பூக்’என்று சொல்
அவளும் ‘பக்பூக்’ என்றாள்
கைகளைத் திறந்தேன்
எங்கே நாணயம்? எங்கே?
கண் சிமிட்டும் நேரத்தில்
நாணயம்
மாயமாய் மறைந்துவிட்டதே!
அவள் சிரித்தாள்
அவளது கண்களில்
அவ்வளவு ஆனந்தம்!
இறைவன் அவளைப் பாதுகாப்பானாக- அவளுக்கு
இன்னும்
இரண்டு வயதுகூட ஆகவில்லை
‘பக்பூக்’
நாணயம்
காணாமல் போய்விட்டது
வெல்வெட் ஆடை
அணிவிக்கப்பட்ட
அவளது பெரிய பொம்மையை
எடுத்துவரச் சென்றாள்
அதை என் கையில் வைத்து
‘பக்பூக்’ என்றாள்
நான் கரகரத்தக் குரலில் சொன்னேன்:
என் உயிரின் உயிரே!
இந்த பொம்மை
மாயமாய் மறைந்தால்
எவ்வளவு அழகாக இருக்கும்!
(பேத்தி ஹனூஃபிற்கு..)
Be the first to rate this book.