வாழ்க்கை என்பது ஏறு வரிசையா? இறங்கு வரிசையா? 'காலத்திற்கேற்பத் தொழில் செய்கிறவருக்கு ஏறு வரிசை. காலத்திற்கும் ஒரே தொழில் செய்கிறவருக்கு இறங்கு வரிசை' என்கிற வாழ்க்கைச் சூத்திரத்தின் புனைவுமொழிபெயர்ப்பே உப்பிலிக்குடி எனும் இந்நாவல்.
உப்பு, கடலில் பூத்துக் கரையில் காம்பு உதிரும். இதுவே புதுக்கோட்டையில், அக்னியாற்றுப் படுகையில் பூத்து அதில் புழங்கி வாழ்ந்த மக்களின் வியர்வையில் காம்பறுந்தது. மண்உப்புக் காய்ச்சியதோடு தங்களையும் காய்ச்சிக்கொண்டவர்கள் உப்பிலியர்கள். மண் உப்பு விலைபோன வரைக்கும் அவர்களும் விலை போனார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மண் உப்புக்குத் தடை விதித்ததும் அவர்கள் தவிட்டு மண்ணைப்போல ஒதுக்கப்பட்டார்கள்.
அக்னியாறு இன்றும் உப்புப் பூத்தே ஓடுகிறது. மேலோட்டக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்கு அந்த உப்பு, ஆறு தன் ஓட்டத்தில் உதிர்த்த வியர்வை முத்துகளாகத் தெரியும். ஆனால், உப்பிலிக்குடி மக்கள் பிழைப்பு அறுந்து, ஊர் அறுந்து, இடம்பெயர்ந்து செல்கையில் உதிர்த்துவிட்டுச் சென்ற கண்ணீர்ப் பொடுகுகள் அவை. அவர்களின் வியர்வை, கண்ணீர் இரண்டிலுமுள்ள உப்பின் காரத்தை இந்நாவல் பேசுகிறது.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.