இந்தக் கவிதை நூலைப் படிப்பதற்கு முன் நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் உதறிவிட்டுத்தான் அமரவேண்டும்.
தண்ணீரில் நீந்தப் பாயும்
ஒரு சிறுவனைப் போல,
அகத்திலும் புறத்திலும்
எந்தப் பாரமும் அற்று.
ஒருவேளை நீங்கள் விடாப்பிடியாய் ஒன்றைப் பற்றி இருந்தால் இந்த நதி உங்கள் சுமையைத் தனியே வீசி எறியும். இல்லையேல் உங்களையே கரை ஒதுக்கும்.
செயற்கை உரத்தில் தோய்ந்து வராமல் உங்கள் சிறு வேர்களைக் கவிதையில் படரச் செய்யுங்கள். உங்களில் அடர்ந்த வனம் உருவாகும்.
-பச்சியப்பன்
Be the first to rate this book.