தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற கோட்பாடு எவ்வாறு உலகளாவிய அளவில் பரவியதோ அதே தொனியில் பலன் தரும் வகையில் எழுதப்பட்ட நூல் "உங்கள் விதியைக் கண்டறியுங்கள்". இதில் டார் சேன்டர்சன் வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். இவர் புற உலக விஷயங்கள் அனைத்தும் உள்ள ஒரு பேராவல் உடைய நிர்வாகி, ஆயினும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அர்த்தம், மன அமைதி எதுவுமின்றி இருக்கின்றார்.
நீடித்து நிலைக்கும் வெற்றிக்கான இரகசியங்களை கண்டறிந்த பிரபலமான துறவி ஜூலியன் மேன்டலை ஏதேச்சையாக சந்திக்கிறார் டார். ஜூலியன், டாரின் உண்மையான சுயரூபத்தை அறியவும், வாழ்க்கையின் கனவுகள் மெய்படவும் ஒரு அசாதாரண பயணப் பாதையில் இட்டுச் செல்லுகிறார். பயணிக்கும் பாதையில், ஒருவரது மிக பெரிய வாழ்க்கை வாழ்வதற்கும், உலகில் ஒளிர்வதற்கும் அத்தியாவசியமான ஏழு சக்திவாய்ந்த பாடங்களை டார் கற்றுக் கொள்கிறார்.
இந்த மறக்கமுடியாத காவியத்தில் நீங்கள் கண்டறியப்போவது -
*எப்படி கட்டுப்பாட்டை துறந்து, உங்கள் அளவற்ற உள்ளாற்றலின் மீது நம்பிக்கை கொள்வது
* எப்படி தனக்குத்தானே துரோகம் செய்தல் எனும் குற்றத்தைத் தவிர்த்து பெருவாழ்வு வாழ்வது
*எப்படி ஒரு ஆரம்பக் கல்வி கற்போனின் மனநிலையை ஏற்பதினால் உயர்ந்த சுய நிபுணத்துவத்தை அடைவது
*எப்படி பயத்தை பொக்கிஷமாக மாற்றுவது
*எப்படி உங்களின் அந்தராத்மாவின் குரலை அறிந்து, வாழ்க்கையின் அர்த்ததை தெரிந்து கொள்வது
*எப்படி உங்களை சோதனைக்குள்ளாக்கும் நிகழ்வுகளை உங்களுக்கு பயன்தரும் நிகழ்வுகளாக மாற்றுவது
*எப்படி உங்களின் முழு உள்ளாற்றலையும் விழித்தெழச் செய்வது
Be the first to rate this book.