இத்தொகுதியில் உள்ள பத்து சிறுகதைகளையும் மெய்நிகழ்ச்சிகளை மையமாக்கி எழுதியிருக்கிறார் மு. குலசேகரன். அனைத்தும் அவருடைய வாழிடத்திலும் வாழிடத்தின் அருகில் அமைந்த பகுதிகளிலும் நிகழ்ந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிற கதைகளைப்போல இக்கதைகளையும் படித்துவிட்டுக் கடந்துசெல்ல நினைக்கும் ஒரு வாசகனை இந்த வாக்குமூலம் சில கணங்களுக்கு நிறுத்திவைக்கிறது. கதையின் மையத்தையும் கதையுலக மனிதர்களையும் அசைபோடவைக்கிறது. ஒரு பெருமூச்சு, கனிவான ஒரு தலையசைப்பு, ஆழ்ந்த துக்கம், கருணை, மனசாட்சி இல்லாத இச்சமூகத்தின் மீது உருவாகும் கசப்பு அல்லது சலிப்பு எனப் பல விதமான உணர்வுகளில் திளைக்கவைக்கின்றது. வாழ்வு சார்ந்து தான் கொண்டிருக்கும் மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்யும் முடிவை நோக்கித் தள்ளிவிடுகிறது.
- பாவண்ணன்
Be the first to rate this book.