நிறுவனம் என்பது ஒரு கூட்டு முயற்சி. தலைமைப் பணியாளர் முதல் அடிப்படைப் பணியாளர் வரை தத்தம் நிலையில் அறத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு எப்படிப் பணிபுரிய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அஃதொடு பணியில் அறத்தொடு நிற்றலின் தேவையையும் அறத்தொடு நிற்போர்தம் உயர் பண்புகளையும் அறத்தொடு நில்லாதோரின் இயல்புகளையும் சுட்டிக் காட்டுகிறது.
பணிப் பண்பாடு ஒரு அறமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும். மேலும் பணி நெருக்கடிகளால் சோர்ந்து விடுவோரை ஆற்றுப்படுத்தி ஊக்கப்படுத்தவும் அறத்தொடு நில்லாப் பணியாளரிடம் மனமாற்றத்தை உண்டாக்கி நிறுவனங்களை மேம்படுத்தவும் ஒரு செல்திசை காட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.