க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்தவை இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் கோட்டோவியமாகத் தீட்டிய ஆளுமைச் சித்திரங்கள் எனலாம். கல்கி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு எழுதிய இந்தக் கட்டுரைத் தொடர் 65 வருடங்களுக்குப்பின் நூல்வடிவம் பெற்றுள்ளது.
Be the first to rate this book.