வளமையான வாழ்விற்கு வழிகாட்டி, உங்களை ஊக்குவிக்கும் கதைகள்.
பிரபல 'தன்முனைப்பாளர்' டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியரின் சுயமுன்னேற்ற வகுப்புகள் எப்போதுமே நிரம்பி வழியும். இங்கே, தான் பயணம் சென்ற நாடுகள், படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார் டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர்.
உரையாடல் வடிவிலான இந்தக் கதைகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆசிரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் மிக பிடித்தமானது. சிடுமூஞ்சிகள் மற்றும் எதிர்மறை உள்ளம் படைத்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.
இதிலுள்ள கதைகளும், பொன்மொழிகளும் மனதுக்கு உயிர்ப்பூட்டுவதோடு, இறுதி வரையிலும் தடையில்லா அக மகிழ்வை வாரி வழங்குகிறது.
Be the first to rate this book.