உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல்.
ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான உலக சினிமாவை எழுத்தால் செதுக்கிய செழியனின் பங்களிப்பை சினிமா உலகம் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும். இது வெறும் தொடராக மட்டுமே நின்றுவிடாமல் தொகுப்பாக வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாசகர்களும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதால் இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியிடப்படுகின்றன.
செழியன்
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர்.
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது. (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுககாக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது. டுலெட் படத்துக்காக கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருது. (2018) சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலி. கடைசிப் படமான அந்தக் திரைக்கதைகளின் மொழிபெயர்ப்பு, உலக சினிமா, பேசும் படம்,முகங்களின் திரைப்படம். ஒளியில் எழுதுதல், டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும், ஹார்மோனியம் சிறுகதைத் தொகுதி, 'த மியூசிக் ஸ்கூல் என்ற பெயரில் மேற்கத்திய இசை குறித்த பத்துத் தொகை நூல்களின் ஆசிரியர், 'த பிலிம் ஸ்கூல என்ற பெயரில் ஒரு பள்ளியைத் துவங்கி இன்டிபெண்டண்ட் சினிமாவுக்கான கலையையும் நுட்பங்களையும் சுற்றுத் தருபவர்.
ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வந்த நாள் முதல்' என்கிற இந்தக் காதல் கவிதைத் தொடரின் ஆசிரியர்.
Be the first to rate this book.