உங்களுக்குள் மேதமை பொதிந்துள்ளது இந்த நூலைக் கையிலேந்தியுள்ளீர்கள் என்பதே நீங்கள் பெற்றுள்ள நற்பேறுகளையும் திறமைகளையும் மெய்ப்படச் செய்வதற்கு அணியமாகி விட்டீர்கள் என்பதற்குக் கண்கூடான சான்று ஆகவே உங்களுடன் நமது உலகமும் எழுச்சியுறுகிறது.
தலைசிறந்த தலைமைப்பண்பியல் ஆசானும் சுயமுன்னேற்ற வல்லுநருமான ராபின் சர்மா இயற்றிய இக்கருத்தோவியம் உங்களுக்குக் காட்டும் வழிகள்:
அச்சத்தை ஆற்றல் ஊற்றாகவும் அடிபணிதலை அதிகாரமாகவும் மாற்றி அமையுங்கள்
* அன்றாடம் அடைகின்ற சிறு சிறு வெற்றிகளை இமாலய வெற்றிக்கான உந்துசக்தியாகக் கொள்ளுங்கள்
*உங்களுடைய துறையை ஆட்டிப்படைக்கின்ற மேலோங்கிய உற்பத்தியாளராக உங்களை மீட்டமையுங்கள்
*என்றென்றைக்கும் நினைவில் நிற்கும் புறஉலகினைப் படைப்பதற்கு உகந்த தனித்திறம் படைத்ததாக உங்களுடைய உள்உலகத்தை உருவாக்குங்கள்
*ஓய்வு, மகிழ்ச்சி, கவின்மிகு ஆன்மீக வாழ்க்கை இவற்றுடன் நீங்கள் ஈட்டிய வெற்றிகளைச் சமநிலைப்படுத்திக் கொள்ளுங்கள்
*உங்களுடைய சுவடுகளைப் பதித்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு மரபுவழிச் சொத்துக்களை விட்டுச் செல்லுங்கள்
Be the first to rate this book.