பறவைகள் நம்பிக்கையாலும் கனவுகளாலும் பறக்கின்றன. வத்திராயிருப்பு தெ. சு.கவுதமன் அப்படி ஒரு பறவை. லட்சியமும் தம்பிக்கையும் இவரது இரு சிறகுகள், நேரடித்தன்மையும் எளிமையும் கூடியவை இவரது கவிதைகள். நடுத்தர வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் படம் பிடித்துக் காட்டுகிற, பேராவல் படைத்தவை இவரது கவிதைகள். நடுத்தர வர்க்கத்தின் மதிப்பீடுகளை இக்கவிதைகள் வழங்குகின்றன. சக மனிதர்களோடு இணக்கமாக வாழ நம்மைப் பழக்குகின்றன கவுதமனின் கவிதைகள். எளிய வாசிப்புக்கும். அர்த்தமுடைய உள்ளடக்கத்துக்கும், உகந்த கவிதைகளைத் தேடுபவர்கள் முள்ளால், தன்னுடைய டோக்கன் நம்பர் ஒன் கவிதைகளோடு நிற்கிறார் தெ.கவுதமன்.
-கரிகாலன்
Be the first to rate this book.